ஏன் இந்த கொடூரம்? | Why nobody could hear Asifa baby’s cry when she was raped?

ஏன் இந்த கொடூரம்? | Why nobody could hear Asifa baby’s cry when she was raped?

காஷ்மீரில் உள்ள கத்துவா என்கிற சிறு கிராமத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆசிபா என்ற 8-வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டார்.

ஏன்/எப்படி இந்த கொடூர செயல் நடந்தது? ஏன் இதை யாரும் தடுக்க முடியவில்லை?

கத்துவா கிராமத்தில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பகர்வால் என்ற நாடோடி இனத்தவர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த கிராமத்தில் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

Image Credit: Chandan Pathak (Pixabay)

இந்த ஊரில் உள்ள ஓய்வு பெற்ற (ஜனவரி 2018) அரசாங்க வருவாய் துறை அதிகாரியான சஞ்சி ராம், கத்துவாவின் தேவஸ்தான கோவிலின் பாதுகாவலராக இருக்கிறார். சஞ்சி ராம் வீட்டிற்கு பின் உள்ள மலைக்காட்டில், ஆசிபா என்ற முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த சிறுமி, குதிரைகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். இதை கவனித்த சஞ்சி ராம் இந்த சிறுமியை கடத்தி வர சொல்லி ஜனவரி 7ம் தேதி தன் மருமகனிடம் கூறினார். இதற்கு முன் இவர் தனது வங்கியிலிருந்து சில தவணைகளில் 10 லட்ச ரூபாய் எடுத்திருக்கிறார்.

ஜனவரி 9ம் தேதி சஞ்சி ராமின் மருமகனும் அவனது கூட்டாளியும் ஆசிபாவை கடத்துவதற்காக போதை மற்றும் மயக்க மருந்தை வாங்கினார்கள். மறுநாள், ஆசிபா தன் குதிரையை தேடி அந்த மலைக்காட்டிற்கு சென்ற போது, அந்த சிறுமியை இவர்கள் பின் தொடர்ந்தனர். ஆசிபா காட்டிற்குள் சென்றவுடன் போதை மருந்தை பயன்படுத்தி சிறுமி ஆசிபாவை கற்பழித்தனர். பின்னர் ஆசிபாவை கடத்தி சஞ்சி ராம் பாதுகாவலராக உள்ள கோவிலில் அடைத்து வைத்தனர்.

ஜனவரி 11ம் தேதி ஆசிபாவின் தந்தை போலீஸிடம் தன் மகளை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். அதே நாள், சஞ்சி ராமின் மருமகனும் அவனது கூட்டாளியும் மீரட் நகரில் படித்துக்கொண்டிருக்கும் சஞ்சி ராமின் மகனை கத்துவா கிராமத்திற்கு வரச்சொல்லி அழைத்தனர். இவர்கள் மூவரும் இந்த கிராமத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரியை சந்தித்து தங்களுக்கு சாதகமாக இருக்கும்படி லஞ்சமாக 1.5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தனர்.

ஜனவரி 14ம் தேதி வரை, சஞ்சி ராம் மற்றும் அவனது மகன், மருமகன், இவர்களின் கூட்டாளிகள் மேலும் 4 போலீஸ் அதிகாரிகள், சிறுமி ஆசிபாவை கோவிலுக்குள் போதை மருந்தை பயன்படுத்தி கற்பழித்துள்ளனர்.

மிக தெளிவாக திட்டமிட்டு இந்த அரக்கர்கள் சிறுமி ஆசிபாவிற்கு போதை மருந்தை கொடுத்து கோவிலுக்குள் வைத்து 5 நாட்களாக கற்பழித்துள்ளனர். இந்த அரக்கர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது முக்கியம். ஆனால், ஏன் இந்த கொடூரத்தை யாரும் தடுக்க முடியவில்லை?

இந்த கோவிலுக்கு அந்த 5 நாட்கள் பொது மக்கள் யாரும் வரவில்லையா? யாருக்கும் தெரியாமல் எப்படி 5 நாட்களுக்கு இந்த கொடூரத்தை இவர்களால் செய்ய முடிந்தது?

கற்பழித்ததுமட்டுமல்லாமல் இந்த சிறுமியை கொடூரமாக கொன்றும் விட்டனர்.

#JusticeforAsifa

Image Credit: Social Media.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com