மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் உரையாற்றிய விஜய், ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ₹2,500 நிதி உதவி, பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் வரவேற்பு பெட்டகம், ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மற்றும் ‘ராணி வேலு நாச்சியார்’ பெயரில் தனி காவல் பிரிவு அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு: பெண்களுக்கு மாதம் ₹2500 உதவித்தொகை உள்பட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்





