புதிய ஆத்திச்சூடி
1. அச்சம் தவிர்
2.ஆண்மைதவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4.ஈகை திறன்
5. உடலினை உறுதி செய்
6. ஊண்மிக விரும்பு
7.எண்ணுவது உயர்வு
8. ஏறு போல் நட
9. ஐம்பொறி ஆட்சி கொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்த லொழி
12. ஔடதங் குறை
13. கற்றது ஒழுகு
14. காலம் அழியேல்
15. கிளைபல தாங்கேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
17. குன்றென நிமிர்ந்துநில்
18. கூடித் தொழில்செய்
19. கெடுப்பது சோர்வு.
20. கேட்டிலுந் துணிந்துநில்
21. கைத்தொழில் போற்று
22. கொடுமையை எதிர்த்துநில்.
23. கோல்கைக் கொண்டுவாழ்
24. கௌவியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்.
26. சாவதற்கு அஞ்சேல்
27. சிதையா நெஞ்சுகொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
30. சூரரைப் போற்று
31. செய்வது துணிந்துசெய்
32. சேர்க்கை அழியேல்
33. சைகையிற் பொருளுணர்
34. சொல்வது தெளிந்துசொல்
35. சோதிடந் தனையிகழ்
36. சௌரியந் தவறேல்
37. ஞமலிபோல் வாழேல்
38. ஞாயிறு போற்று
39. ஞிமிரென இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
41. ஞேயங் காத்தல்செய்
42. தன்மை இழவேல்
43. தாழ்ந்து நடவேல்
44. திருவினை வென்றுவாழ்
45. தீயோர்க்கு அஞ்சேல்
46. துன்பம் மறந்திடு
47. தூற்றுதல் ஒழி
48. தெய்வம் நீயென்றுஉணர்
49. தேசத்தை காத்தல்செய்
50. தையலை உயர்வுசெய்
51. தொன்மைக்கு அஞ்சேல்
52. தோல்வியிற் கலங்கேல்
53. தவத்தினை நிதம்புரி
54. நன்று கருது
55. நாளெல்லாம் வினைசெய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநூல் பயில்
58. நுனியளவு செல்
59. நூலினை பகுத்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
61. நேர்படப் பேசு
62. நையப் புடை
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
65. பணத்தினைப் பெருக்கு
66. பாட்டினில் அன்புசெய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடங்கொடேல்
69. புதியன விரும்பு
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிதுகேள்
72. பேய்களுக்கு அஞ்சேல்
73. பொய்மை இகழ்
74. போர்த்தொழில் பழகு
75. மந்திரம் வலிமை
76. மானம் போற்று
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமாறு உணர்ந்துகொள்
79. முனையிலே முகத்துநில்
80. மூப்பினுக்கு இடங்கோடேல்
81. மெல்லத் தெரிந்துசொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவஞ்செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந் தனைக்கொல்
86. யவனர்போல் முயற்சிகொள்
87. யாவரையும் மதித்துவாழ்
88. யௌவனம் காத்தல்செய்
89. ரஸத்திலே தேர்ச்சிக்கொள்
90. ராஜஸம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசிப்பல வென்றுணர்
93. ரூபம் செம்மைசெய்
94. ரேகையில் கனிகொள்
95. ரோதனம் தவிர்
96. ரௌத்திரம் பழகு
97. லவம் பலவெள்ளமாம்
98. லாவகம் பயிற்சிசெய்
99. லீலை இவ்வுலகு
100. (உ) லுத்தரை இகழ்
101. (உ)லோகநூல் கற்றுணர்
102. லௌகிகம் ஆற்று
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூற் பயிற்சிக்கொள்
105. விதையினை தெரிந்திடு
106. வீரியம் பெருக்கு
107. வெடிப்புறப் பேசு
108. வேதம் புதுமைசெய்
109. வையத் தலைமைகொள்
110. வௌவுதல் நீக்கு
