சிலுவையின் வார்த்தை 02:00 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:00 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.

லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில அவர்கள் சேர்ந்த பொழுது, அங்கே அவரையும் இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவையில் அறைந்தார்கள்.

மாற்கு 15:28 அக்கிராமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்ற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. (ஏசாயா 53:12).

இயேசு சிலுவையில் அறையப்பட்டார். பொய்க்குற்றச்சாட்டுகளை இயேசுவின் மேல் கூறினார்கள். வெற்றுக்கூச்சல் போட்டு ஏசுவுக்கு எதிராக அமளியாய் ஏற்படுத்தினார்கள். யூதர்களுடைய நியாயப் பிரமாணத்திற்கு ஏற்காத வகையில் நீதியையும் நியாயத்தையும் மீறி இயேசுவை சிலுவைக்கு ஒப்புக் கொடுத்தார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்ற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக ஏசுவுக்கு வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் அவருடைய இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவையில் அறைந்தார்கள். எருசலேம் நகரத்தில் களவு செய்தவர்களும் ஜனங்கள் மத்தியில் கலகம் பண்ணினவர்களும், கொலை செய்து ஆட்சியாளர்களுக்கு சவாலாயிருந்தவர்களை இயேசுவின் சிலுவைக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் சிலுவைகளில் அறைந்தார்கள்.

தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Stefan Keller [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com